Published : 25 Nov 2021 03:14 AM
Last Updated : 25 Nov 2021 03:14 AM

மார்க்சிஸ்ட் நூதன ஆர்ப்பாட்டம் :

தூத்துக்குடி: தூத்துக்குடி ஒன்றியம் மாப்பிள்ளையூரணி ஊராட்சிக்கு உட்பட்ட தாளமுத்துநகர் பகுதியில் சுமார் 1.5 லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர். தாளமுத்துநகர் பிரதான சாலை சேதமடைந்து ஓராண்டுக்கும் மேலாக சீரமைக்கப்படாமல் உள்ளது. தாளமுத்துநகர் பிரதான கடைவீதி பகுதியில் தொடங்கி ராஜபாளையம், மேல அலங்காரதட்டு, கோயில்பிள்ளைவிளை, முருகன் தியேட்டர் வரையிலான சாலை குண்டும் குழியுமாக காணப்படுகிறது. சாலையை சீரமைக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நேற்று தாளமுத்துநகர் சந்திப்பு பகுதியில் ஒற்றைக்காலில் நொண்டியடித்து நூதன முறையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் சங்கரன் தலைமை வகித்தார். ஒன்றியக்குழு உறுப்பினர்கள் ஜெகதீஸ்வரன், கண்ணன், தாளமுத்துநகர் கிளைச் செயலாளர் துளசிராமன் மற்றும் உப்பு தொழிலாளர் சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x