வேலூரில் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் :

வேலூரில் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் :
Updated on
1 min read

வேலூர் மண்டி தெருவில் மாநகராட்சி சுகாதார அலுவலர் சிவக்குமார் தலைமையிலான மாநகராட்சி ஊழியர்கள் நேற்று ஆய்வு நடத்தினர். அப்போது அங்கு கேட்பாரின்றி கிடந்த மூட்டைகளை பிரித்து சோதனை யிட்டபோது, அதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் 20 மூட்டைகளில் இருப்பது தெரியவந்தது. அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in