Published : 24 Nov 2021 03:08 AM
Last Updated : 24 Nov 2021 03:08 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொடிநாள் விழாவின் போது முப்படை வீரர்களின் நலன் கருதி தாராளமாக நன்கொடை அளிக்க வேண்டும் என ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
நம் நாட்டு எல்லைகளைப் பாதுகாக்கும் புனிதப் பணியில் ஈடுபட்டுள்ள முப்படை வீரர்களை பாராட்டவும், போரிலும், போர் தொடர்பான நடவடிக்கைகளிலும் இன்னுயிர் இழந்த தியாகிகளையும், விழுப்புண் பெற்ற வீரர்களையும் நெஞ்சார நினைவு கூறும் வகையிலும் கொடிநாள் விழா ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 7-ம் தேதி உண்டியல் மூலம் நிதி வசூல் செய்யப்படுகிறது. இவ்வாறு திரட்டப்படும் நிதியானது போரில் உயிர் நீத்த தியாகிகளின் குடும்பத்தைச் சார்ந்தோரின் நலன் பேணப் பயன்படுத்தப்படுகிறது. அதன்படி இவ்வாண்டும் வரும் டிசம்பர் 7-ம் தேதி காலை 10.30 மணியளவில் உண்டியல் மூலம் வசூல் தொடங்கி வைக்கப்படுகிறது. எனவே, பொதுமக்கள் அனைவரும் நம் நாட்டைக் காத்த முப்படை வீரர்களின் நலன் கருதி தாராளமாக நன்கொடையளித்து உதவ வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT