Published : 24 Nov 2021 03:08 AM
Last Updated : 24 Nov 2021 03:08 AM

தென்பெண்ணை ஆற்றில் தொடரும் வெள்ள அபாய எச்சரிக்கை :

ஓசூர்: தென்பெண்ணை ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக அதிகனமழை பெய்து வருவதால் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கெலவரப்பள்ளி அணையின் மொத்த கொள்ளளவு 44.28 அடி. தற்போது அணையின் நீர் மட்டம் 40.02 அடி. அணைக்கு விநாடிக்கு 2146 கனஅடி நீர் வருகிறது. அணையின் பாதுகாப்பு கருதி அணையில் இருந்து விநாடிக்கு 2260 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.

இதனால் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் ஓசூர் வட்டாட்சியர் மேற்பார்வையில் கிராம நிர்வாக அலுவலர்கள் மூலமாக, ஆற்றின் கரையோரம் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் கிராமமக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லவேண்டும் என்று தண்டோரா மூலமாக எச்சரிக்கை செய்யும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x