Published : 24 Nov 2021 03:08 AM
Last Updated : 24 Nov 2021 03:08 AM

இலங்கைக்கான இந்திய தூதர் ஆளுநர், முதல்வருடன் சந்திப்பு :

இலங்கைக்கான இந்திய தூதர் கோபால் பாக்லே ஆளுநர் தமிழிசை, முதல்வர் ரங்கசாமியுடன் சந்தித்து பேசினார்.

இலங்கைக்கான இந்திய தூதர் கோபால் பாக்லே, அரசு முறைப் பய ணமாக நேற்று புதுச்சேரி வந்தார். அவர் ஆளுநர் மாளிகையில் துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனை மரியாதை நிமித்தமாக சந்தித்தார். அப்போது இரு நாடுகளின் சுமூகமான உறவுகள் குறித்து விவாதித்தனர்.

மீனவர்களின் உயிர், உடைமைப் பாதுகாப்பு, வாழ்வாதாரம் ஆகிய வற்றை கருத்தில் கொண்டு மனிதாபிமான முறையில் மீனவர்கள் பிரச்சி னையை அனுக வேண்டும் என்று துணைநிலை ஆளுநர் தெரிவித்தார். அதனை ஏற்றுக்கொண்ட அதிகாரி மீனவர்களை பாதுகாப்பது அரசின் கடமை என்பதை தெரிவித்தார்.

காரைக்கால் மற்றும் இலங்கை இடையேயான படகு போக்குவரத்தை மீண்டும் தொடங்குவது, இந்தியா இலங்கை இடையேயான படகு அவசர ஊர்தி (Boat-Ambulance) அறிமுகப் படுத்துவது ஆகியவற்றுக்கான முயற் சிகள் மேற்கொள்ளப்பட வேண்டியது குறித்தும் ஆலோசனை நடத்தினார்.

மேலும், தமிழக மீனவர்கள் 21 பேரை இலங்கை அரசு விடுதலை செய்வது குறித்தும் கேட்டறிந்தார். அதில் இரண்டு மீனவர்களுக்கு கரோனா தொற்று இருப்பதாக தெரிவதால் அவர்களுக்கு நல்ல முறையில் சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

இதேபோல் புதுச்சேரி சட்டப்பேரவை வந்த கோபால் பாக்லே தலைமையிலான குழுவினர் முதல்வர் ரங்கசாமியை அவரது அலுவலகத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x