Published : 24 Nov 2021 03:08 AM
Last Updated : 24 Nov 2021 03:08 AM

காரைக்குடி மாணவிக்கு பாலியல் தொல்லை : சிபிஐ விசாரணை கேட்டு போராட்டம் :

மாணவிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த வழக்கை சிபிஐ விசாரிக்க வலியுறுத்தி காரைக்குடி கல்லூரி சாலையில் ஆர்ப்பாட்டம் செய்த சமூக நல கூட்டியகத்தினர்.

காரைக்குடி தனியார் பள்ளியில் பயிலும் பிளஸ் 2 மாணவி, அப்பகுதியில் உள்ள அழகு நிலையத்துக்குச் சென்றபோது சிலர் பாலியல் தொல்லை கொடுத்தனர். இது குறித்து காரைக்குடி மகளிர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து பெண் உட்பட 5 பேரை கைது செய்தனர். இந்நிலையில் மேலும் பல மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ள தாகவும், இதனால் சிபிஐ விசாரணை நடத்த வேண்டுமெனவும் கூறி இந்திய மாதர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் இணைந்த சமூக நல கூட்டியக்கம் சார்பில் கல்லூரி சாலையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x