Published : 24 Nov 2021 03:09 AM
Last Updated : 24 Nov 2021 03:09 AM

சூளகிரியில் வளர்ச்சி திட்டப் பணிகள் ஓசூர் எம்எல்ஏ தொடங்கி வைத்தார் :

சூளகிரி ஒன்றியத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை அடிக்கல் நாட்டி, ஓசூர் எம்எல்ஏ பிரகாஷ் தொடங்கி வைத்தார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி தொகுதிக்கு உட்பட்ட சூளகிரி ஒன்றியத்தில் பல்வேறு கிராமங்களில் மாவட்ட ஊராட்சிக்குழு நிதியில் மக்கள் வளர்ச்சித் திட்டப் பணிகள் தொடக்க விழா நடந்தது. மாவட்ட கவுன்சிலரும், திமுக கலை இலக்கியப் பேரவை மாவட்ட அமைப்பாளருமான பாக்கியராஜ் தலைமை வகித்தார்.

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக செயலாளரும், ஓசூர்எம்எல்ஏவுமான ஒய்.பிரகாஷ்கலந்து கொண்டு, இம்மிடிநாயக்கனப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட சொர்காயலப்பள்ளி, புலியரசி ஆகிய கிராமங்களில் ரூ.9.30 லட்சம் மதிப்பில் தடுப்புச்சுவர், மேலும் ஊராட்சி சாமல்பள்ளம் கிராமத்தில் ரூ.9.75 லட்சத்தில் சாலை அமைக்கும் பணியும்,சென்னப்பள்ளி ஊராட்சியில் ரூ.9.98 லட்சம் மதிப்பிலான பணிகளையும் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏ முருகன், சூளகிரி தெற்கு ஒன்றிய செயலாளர் வெங்கடேஷ், தலைமை செயற்குழு உறுப்பினர் வீரரெட்டி, ஒன்றிய துணை செயலாளர் ஹரிஷ், கேடிஆர் (எ) திம்மராஜ், கேசவன், சாலம்மாள், மஞ்சுநாதன், ஜெய்சங்கர், ராஜாராம், மாரிமுத்து, ராமச்சந்திரன், முனிச்சந்திரன், வெங்கடேஷ், சீனிவாசன், கிருஷ்ணன், சூளகிரி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுப்பிரமணி, சிவக்குமார், ஒப்பந்ததாரர் சுதாகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x