Published : 24 Nov 2021 03:10 AM
Last Updated : 24 Nov 2021 03:10 AM

கோவில்பட்டி அருகே கோயிலில் திருட்டு :

கோவில்பட்டி அருகே வடக்கு திட்டங்குளம் கிராமத்தில் கண்ணூர் அம்மன், காளியம்மன் கோயில் உள்ளது. இங்கு பாலசங்கர் பூசாரியாக உள்ளார். நேற்று செவ்வாய்க்கிழமை என்பதால் காலையில் பூஜைகள் செய்ய கோயிலுக்குச் சென்றார். அங்கு கோயிலின் வெளிப்பக்க கதவின் பூட்டுகள் உடைக்கப்பட்டிருந்தன. உள்ளே 2 பித்தளை குட உண்டியல்கள், மற்றொரு உண்டியல் மற்றும் அம்மனுக்கு அணிவிக்கப்பட்டிருந்த 10 கிராம் தங்க நகை, வெள்ளி, பித்தளை கிரீடம் ஆகியவற்றை காணவில்லை. கோவில்பட்டி கிழக்கு காவல் ஆய்வாளர் சுஜித் ஆனந்த் தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x