Published : 24 Nov 2021 03:10 AM
Last Updated : 24 Nov 2021 03:10 AM

சாலை விபத்தில் : பெண் உயிரிழப்பு :

சென்னை வடபழனியைச் சேர்ந்தவர் கணபதிசுப்பிரமணியம்(40). இவரது மனைவி பூர்ணிமா(36). இவர்கள் 2 பேரும் பெங்களுருவில் உள்ள உறவினரை பார்க்க சென்னையில் இருந்து கார் மூலம் பெங்களூருக்கு புறப்பட்டனர். காரை, கணபதிசுப்பிரமணியம் ஓட்டினார்.

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றாம்பள்ளி தேசிய நெடுஞ் சாலையை அவர்கள் நேற்று முன்தினம் கடக்க முயன்றபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி மத்திய தடுப்பு கம்பிகள் மீது மோதி, எதிர் திசையில் பாய்ந்து அங்குள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது.

இதில், பூர்ணிமா சம்பவஇடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். கணபதிசுப்பிரமணியம் காயத்துடன் உயிர் தப்பினார். தகவலறிந்ததும் நாட்றாம்பள்ளி காவல் துறையினர் அங்கு விரைந்து சென்று காயமடைந்த கணபதிசுப்பிரமணியத்தை மீட்டு சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x