Published : 23 Nov 2021 03:07 AM
Last Updated : 23 Nov 2021 03:07 AM

கிராமிய கலைக் குழுவை - பதிவுபெற்ற அமைப்பாக்கித் தர திருநங்கையர் கோரிக்கை :

தருமபுரி ஆட்சியரிடம் மனு அளிக்க வந்த, ‘தகடூர் கிராமிய கலைக் குழு’ அமைப்பினர்.

தருமபுரி

தருமபுரி மாவட்டம் நல்லம் பள்ளி வட்டம் அதியமான்கோட்டை அடுத்த புறவடை பகுதியில் வசிக்கும் திருநங்கை யரில் சிலர் இணைந்து, ‘தகடூர் கிராமிய கலைக்குழு’ என்ற பெயரில் கலைக் குழுவை செயல்படுத்தி வருகின்றனர். குழுவின் தலைவர் இளையரசி தலைமையிலான திருநங்கையர் நேற்று தருமபுரி ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

மனுவில், ‘தருமபுரி மாவட்டம் மொரப்பூரில் இருந்து செயல்படும், ‘கலைநிலா’ என்ற கிராமிய கலைக் குழுவினருடன், கடந்த கரோனா தொற்று காலத்தில் இணைந்து கலை நிகழ்ச்சிகள் தொடர்பான பயிற்சிகளை பெற்றோம். பின்னர், ‘தகடூர் கிராமிய கலைக் குழு’ என்ற பெயரில் புதிதாக கலைக் குழுவை உருவாக்கி செயல்பட்டு வருகிறோம். எங்கள் குழு, தற்போது அரசு செயல்படுத்தும், ‘இல்லம் தேடி கல்வி’ திட்டத்தின் கீழ் பணியாற்றி வருகிறது. எங்களின் பொருளாதார சூழலால் எங்கள் கலைக் குழு அமைப்பை முறைப்படி பதிவு செய்ய முடியவில்லை. எனவே, எங்கள் அமைப்பை மாவட்ட நிர்வாகம் சார்பில் பதிவு பெற்ற அமைப்பாக மாற்றித் தருமாறு கேட்டுக் கொள்கிறோம்’ என்று கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x