Published : 23 Nov 2021 03:07 AM
Last Updated : 23 Nov 2021 03:07 AM

உரிமம் பெறாத நாட்டு துப்பாக்கியுடன் சுற்றித் திரிந்த இருவர் கைது :

மதிகோன்பாளையம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் வடிவேல் தலைமையிலான போலீஸார் நேற்று முன்தினம் மாலை வெங்கட்டானூர் கணவாய் முனியப்பன் கோயில் அருகே ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சந்தேகப்படும் வகையில் அவ்வழியாக வந்த இருவரைப் பிடித்து விசாரித்தனர். அவர்கள், சோலைக்கொட்டாய் அடுத்த வெங்கட்டானூரைச் சேர்ந்த காவேரி மகன் பெரியண்ணன் (37), அக்கமன அள்ளி அடுத்த கோடியூர் பூமணி மகன் மாரியப்பன் (32) என விசாரணையில் தெரிய வந்தது. மேலும், அவர்கள் உரிமம் பெறாத நாட்டுத் துப்பாக்கி ஒன்றை சாக்குப் பையில் மறைத்து வனவிலங்கு வேட்டையில் ஈடுபடும் நோக்கத்துடன் எடுத்துச் சென்றதும் தெரிய வந்தது. எனவே, அவர்களை கைது செய்த போலீஸார் அவர்களிடம் இருந்த நாட்டுத் துப்பாக்கியையும் பறிமுதல் செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x