Published : 23 Nov 2021 03:07 AM
Last Updated : 23 Nov 2021 03:07 AM
தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து விநாடிக்கு 32 ஆயிரம் கன அடியாக குறைந்தது.
பென்னாகரம் வட்டம் ஒகேனக்கல் காவிரியாற்றில் நேற்று முன்தினம் காலையில் விநாடிக்கு 60 ஆயிரம் கன அடியாகவும், மாலையில் விநாடிக்கு 50 ஆயிரம் கன அடியாகவும் நீர்வரத்து பதிவானது. இந்நிலையில், நேற்று காலை நீர்வரத்து விநாடிக்கு 40 ஆயிரம் கன அடியாக பதிவானது. நேற்று மாலை இந்த அளவில் மேலும் சரிவு ஏற்பட்டு விநாடிக்கு 32 ஆயிரம் கன அடி என்ற அளவில் காவிரியாற்றில் தண்ணீர் ஓடிக் கொண்டிருந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT