Published : 23 Nov 2021 03:07 AM
Last Updated : 23 Nov 2021 03:07 AM

மஞ்சள் ரேஷன் கார்டுக்கும் : ரூ. 5 ஆயிரம் மழை நிவாரணம் : புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு :

வெள்ளப் பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்தியக்குழு நேற்று இரவு புதுச்சேரிக்கு வந்தது. அக்குழுவினருடன் சட்டப்பேரவை வளாகத்தில் கலந்து ஆலோசித்த பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் ரங்கசாமி கூறியதாவது:

"புதுச்சேரியில் வழக்கத்தை விட கூடுதலாக மழை பொழிவு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக 130 செ.மீக்கு பதிலாக ரூ. 180 செ.மீ மழை பெய்தது. வெள்ளப்பெருக்கால் பாகூர் உட்பட பல பகுதிகளில் கடும் பாதிப்பு ஏற்பட்டது.

புதுச்சேரி, காரைக்காலில் மொத்தமாக 7 ஆயிரம் ஹெக்டேர் நெற்பயிர் தொடங்கி, பல பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. ஏராளமானோர் வீடுகள்,கால்நடைகளை இழந்துள்ளனர். மழை சேதம் அதிகளவில் உள்ளது.

இடைக்கால நிவாரணமாக மத்திய அரசிடம் ரூ. 300 கோடி கேட்டுள்ளோம். மத்திய உள்துறை அமைச்சருக்கும் கடிதம் அனுப்பியுள்ளோம். மத்திய அரசு உதவும் என்ற நம்பிக்கையுள்ளது. மத்தியக்குழு ஆய்வுக்கு பின் மேலும் நிவாரணம் கேட்போம்.

மழைக்கால நிவாரணமாக சிவப்பு அட்டைத்தாரர்களுக்கு அளித்தது போல் மஞ்சள் ரேஷன் அட்டைத்தாரர்களுக்கும் தலா ரூ. 5 ஆயிரம் தர கோரிக்கைகள் வந்தன. அதனால் மஞ்சள் அட்டைதாரர்களுக்கும் ரூ. 5 ஆயிரம் வழங்கப்படும். தீபாவளிக்கு அறிவித்த 10 கிலோ அரிசி, 2 கிலோ சர்க்கரை அடுத்த வாரம் ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்படும் என்று குறிப்பிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x