ராமநாதபுரம் அருகே முறைகேடாக பாஸ்போர்ட் பெற முயன்றவர் கைது :

ராமநாதபுரம் அருகே முறைகேடாக பாஸ்போர்ட் பெற முயன்றவர் கைது  :
Updated on
1 min read

ராமநாதபுரம் அருகே தொருவளூரைச் சேர்ந்த பாண்டி மகன் முருகன் (47). இவர், அதே ஊரைச் சேர்ந்த நாகலிங்கம் மகன் முருகனுக்கு பாஸ்போர்ட் பெற்றுத் தருவதாகக் கூறி, சான்றிதழ்களை பெற்றுள்ளார். பின்னர் அந்த சான்றிதழ்களை பயன்படுத்தி முருகன் தனது போட்டோவை விண்ணப்பத்தில் ஒட்டி பாஸ்போர்ட்டுக்கு 2.9.2021-ல் விண்ணப்பித்துள்ளார்.

மதுரை பாஸ்போர்ட் அலுவலக விசாரணையில் இந்த முறைகேடு தெரிய வந்தது. இது தொடர்பாக புகாரின் பேரில் ராமநாதபுரம் பஜார் போலீஸார், முருகனை கைது செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in