போக்குவரத்துக்கழக ஏஐடியுசி ஓய்வூதியர்கள் சங்க கூட்டம் :

போக்குவரத்துக்கழக ஏஐடியுசி ஓய்வூதியர்கள் சங்க கூட்டம் :
Updated on
1 min read

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் ஏஐடியுசி ஓய்வூதியர்கள் சங்க மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் தஞ்சாவூரில் உள்ள ஏஐடியுசி அலுவலகத்தில் சங்கத் தலைவர் மல்லி ஜி.தியாகராஜன் தலைமையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில், பொதுச் செயலாளர் பி.அப்பாத்துரை, பொருளாளர் எஸ்.பாலசுப்பிரமணியன், மாநில துணைத் தலைவர் துரை.மதிவாணன், ஏஐடியுசி மாவட்டச் செயலாளர் ஆர்.தில்லைவனம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில், போக்குவரத்துக் கழக ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு பழைய, புதிய அகவிலைப்படி உயர்வுத் தொகையை இணைத்து, ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும்.

அரசு ஓய்வூதியர்களுக்கு அமல்படுத்தப்பட்டு வரும் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், குடும்ப நலநிதி திட்டத்தை போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கும் அமல்படுத்த வேண்டும். 2020 மே மாதம் முதல் பணியிலிருந்து ஓய்வுபெற்றவர்கள், விருப்ப ஓய்வுபெற்றவர்கள், பணியின்போது இறந்தவர்கள், மருத்துவப் பணி ஓய்வுபெற்றவர்களுக்கு இன்னும் வழங்கப்படாமல் உள்ள ஓய்வுகால பணப்பலன்களை உடனே வழங்க வேண்டும்.

போக்குவரத்துக்கழக தொழிலாளர்கள், ஓய்வூதியர்களின் நீண்டகால கோரிக்கைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றித்தர வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in