Published : 22 Nov 2021 03:08 AM
Last Updated : 22 Nov 2021 03:08 AM
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுடன் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோதங்கராஜ் சென்னை யிலிருந்து காணொலி மூலம் கலந்தாய்வு மேற்கொண்டார்.
நிகழ்ச்சிக்கு குமரி மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்த் தலைமை வகித்தார். பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள் குறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், மாவட்டக் கல்வி அலுவலர்கள், உதவி கல்வி அலுவலர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்து ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
கரோனா தடுப்பூசி
அப்போது, கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் பழுதான கட்டிடங்களை சரி செய்தல், இடிக்கப்பட வேண்டிய நிலை யிலுள்ள கட்டிடங்களை இடித்து அப்புறப்படுத்துதல், பள்ளி வளாகத்தை தூய்மையாக பயன்படுத்துதல், அனைத்து ஆசிரியர்கள், பணியாளர்கள் கரோனா தடுப்பூசி செலுத்துவதை உறுதி செய்தல் போன்றவை குறித்து முதன்மைக் கல்வி அலுவலர், ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
இதில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் புகழேந்தி, மற்றும் தலைமை ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT