சிவகங்கையில் அமைச்சர் பங்கேற்ற விழாவில் - அதிகாரிகள் கையெழுத்தின்றி வழங்கப்பட்ட கடன் உத்தரவு :

சிவகங்கையில் வழங்கப்பட்ட கடன் தொடர்பான படிவத்தில் அதிகாரிகள் கையெழுத்து இல்லாமல் உள்ளது.
சிவகங்கையில் வழங்கப்பட்ட கடன் தொடர்பான படிவத்தில் அதிகாரிகள் கையெழுத்து இல்லாமல் உள்ளது.
Updated on
1 min read

சிவகங்கையில் மாவட்ட ஆட்சியர் பி.மதுசூதன்ரெட்டி தலைமையில் நடந்த கூட்டுறவு விழாவில் அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் ரூ.20 கோடியே 92 லட்சத்து 91 ஆயிரம் மதிப்பிலான கடன் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இதில் இளையான்குடியைச் சேர்ந்த பெண் மாற்றுத்திறனாளி ஒருவருக்கு ரூ.1 லட்சம் கடன் உத்தரவு வழங்கப்பட்டது. ஆனால் அந்த உத்தரவில் அதிகாரிகளின் கையெழுத்து இல்லை. இதேபோல் மேலும் சிலருக்கும் கடன் உத்தரவுகளில் அதிகாரிகள் கையெழுத்து இல்லை.

இதுகுறித்து மாற்றுத்திறனாளி பெண் கூறியதாவது: நான் ஏற்கெனவே இளையான்குடி நகர் கூட்டுறவு வங்கியில் கடன் பெற்று 3 மாதங்களாக தவணை செலுத்தி வருகிறேன். இந்நிலையில் என்னை விழாவுக்கு அழைத்து கையெழுத்து இல்லாத உத்தரவை வழங்கியுள்ளனர். இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது, பெயரளவில் இந்த உத்தரவை கொடுத்ததாகக் கூறுகின்றனர் இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in