மார்க்சிஸ்ட் மதுரை மாநகர் மாநாடு :

மார்க்சிஸ்ட் மதுரை மாநகர் மாநாடு :
Updated on
1 min read

மதுரை மாநகர் மார்க்சிஸ்ட் கட்சியின் 23-வது மாநாடு விராட்டிபத்தில் நேற்று தொடங்கியது. மாவட்டக்குழு உறுப்பினர் கு.கணேசன் வரவேற்றார். மாவட்ட செயலாளர் ரா.விஜயராஜன், செயற்குழு உறுப்பினர் சசிகலா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இம்மாநாட்டினை மாநில செயற்குழு உறுப்பினர் க.கனகராஜ் தொடங்கி வைத்தார். இதில் மதுரை எம்பி சு.வெங்கடேசன், மாநில செயற்குழு உறுப்பினர்கள் ஏ.லாசர், மதுக்கூர் ராமலிங்கம், மாநிலக்குழு உறுப்பினர் சி.ராமகிருஷ்ணன், புறநகர் மாவட்ட செயலாளர் கே.ராஜேந்திரன் பங்கேற்றனர்.

கேரள முதல்வர் பினராயி விஜயன் எழுதிய ‘ஆர்.எஸ்.எஸ்-க்கு எதிராக இந்தியா’ என்ற தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நூலை மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.ஏ.பெருமாள் வெளியிட, மாநிலக்குழு உறுப்பினர் க.சுவாமிநாதன் பெற்றுக்கொண்டார்.

இம்மாநாட்டில், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப்பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in