Published : 21 Nov 2021 03:08 AM
Last Updated : 21 Nov 2021 03:08 AM

குழித்துறை அருகே நிலச்சரிவால் ரயில் போக்குவரத்து மாற்றம் :

மதுரை

மதுரை ரயில்வே கோட்ட நிர்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: நாகர்கோவில் - திருவனந்தபுரம் ரயில் பாதையில் குழித்துறை அருகே நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் ரயில் போக்குவரத்தில் சிறிய மாற்றங்கள் செய்யப்பட் டுள்ளன. அதன்படி இன்று மாலை கொல்லத்தில் இருந்து புறப்படும் கொல்லம் - சென்னை எழும்பூர் அனந்தபுரி எக்ஸ்பிரஸ், நாகர்கோவில் - கொல்லம் ரயில் நிலையங்களுக்கு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இன்று காலை திருச்சி யிலிருந்து புறப்பட வேண்டிய திருச்சி - திருவனந்தபுரம் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் மற்றும் இன்று முற்பகல் திருவனந்தபுரத்திலிருந்து புறப்பட வேண்டிய திருவனந்தபுரம் - திருச்சி இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ஆகியவை திருநெல்வேலி - திருவனந்தபுரம் இடையே பகுதியாக ரத்து செய்யப் படுகிறது.

இன்று இரவு மதுரையிலிருந்து புறப்பட வேண்டிய மதுரை- புனலூர் எக்ஸ்பிரஸ் ரயில் திருநெல்வேலி வரை இயக்கப்படும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x