Published : 21 Nov 2021 03:08 AM
Last Updated : 21 Nov 2021 03:08 AM

நாகர்கோவில் - திருவனந்தபுரம் ரயில் பாதையில் நிலச்சரிவு : ரயில்கள் போக்குவரத்தில் மாற்றம்

மதுரை ரயில்வே கோட்ட நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

நாகர்கோவில் - திருவனந்தபுரம் ரயில் பாதையில் குழித்துறை அருகே நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் ரயில் போக்குவரத்தில் சிறிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

அதன்படி நவம்பர் 21-ம் தேதிமாலை கொல்லத்தில் இருந்து புறப்படும் கொல்லம் - சென்னை எழும்பூர் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் (வண்டி எண் 16724) நாகர்கோவில் - கொல்லம் ரயில் நிலையங்களுக்கு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

நவ.21 காலை திருச்சியிலிருந்து புறப்பட வேண்டிய திருச்சி - திருவனந்தபுரம் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் (22627) மற்றும் நவ.21 முற்பகல் திருவனந்தபுரத்திலி ருந்து புறப்பட வேண்டிய திருவனந்தபுரம் - திருச்சி இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் (22628) ஆகியவை திருநெல்வேலி - திருவனந்தபுரம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. நவ.21-ம் தேதிஇரவு மதுரையிலிருந்து புறப்படவேண்டிய மதுரை - புனலூர்எக்ஸ்பிரஸ் ரயில் (16729) திருநெல்வேலி வரை இயக்கப்படும். மறு மார்க்கத்தில் இந்த ரயில் (16730) திருநெல்வேலியிலிருந்து அதிகாலை 4 மணிக்கு புறப்பட்டு மதுரை வந்து சேரும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x