Published : 21 Nov 2021 03:09 AM
Last Updated : 21 Nov 2021 03:09 AM

மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா :

தேசிய நூலக வார விழாவை முன்னிட்டு தூத்துக்குடியில் மாவட்ட நூலக ஆணைக்குழு, மாவட்ட மைய நூலகம் மற்றும் அரிமா சங்கம் சார்பில் நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு விருது மற்றும் சான்றிதழ் வழங்கும் விழா நடந்தது. மாவட்ட மைய நூலக முதல் நிலை நூலகர் மா.ராம்சங்கர் வரவேற்றார். மாவட்ட நூலக அலுவலர் பா.ரெங்கநாயகி, அரிமா சங்கத் தலைவர் சுரேஷ் தங்கராயப்பன் முன்னிலை வகித்தனர். விழாவில் மாநகராட்சி ஆணையாளர் தி.சாரு வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு விருது வழங்கி பேசினார். தூத்துக்குடி அரசு இசைப்பள்ளி மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சி, பரதநாட்டியம், வாய்ப்பாட்டு, வயலின் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது. ஆசிரியர் கோ.எழிலன், வாசகர் வட்ட துணைத் தலைவர் எம்.எஸ்.செய்யது முகமது ஷெரீப், 2-ம் நிலை நூலகர் கொ.சங்கரன் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x