Published : 20 Nov 2021 03:08 AM
Last Updated : 20 Nov 2021 03:08 AM

10 ஆண்டுகளுக்கு பிறகு : மானாமதுரை அருகே கால்வாயில் நீர்வரத்து :

மானாமதுரை அருகே கீழமேல்குடி கண்மாய்க்கு வைகை ஆற்றில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்படும். ஆனால் இக்கண்மாய்க்கு செல்லும் கால்வாயை ராஜகம்பீரம் அருகே தனியார் சிலர் ஆக்கிரமித்திருந்தனர். இதனால் அந்த கால்வாயில் கடந்த 10 ஆண்டுகளாக வைகை ஆற்றில் இருந்து தண்ணீர் விடுவதில் சிக்கல் ஏற்பட்டது. கிராம மக்களின் தொடர் கோரிக்கையை அடுத்து மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் 6 மாதங்களுக்கு முன்பு ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, கால்வாய் தூர்வாரப்பட்டது.

நேற்று வைகை ஆற்றிலிருந்து இக்கால்வாய் மூலம் கீழமேல்குடி கண்மாய்க்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டது. கால்வாயில் வந்த தண்ணீரை மலர் தூவி ஊராட்சித் தலைவர் தர்மாராமு தலைமையிலான கிராமத்தினர் வரவேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x