செய்துங்கநல்லூரில் நூலக வாரவிழா :

செய்துங்கநல்லூரில் நூலக வாரவிழா :
Updated on
1 min read

செய்துங்கநல்லூர் அரசு நூலகத்தில் நூலக வாரவிழா நடைபெற்றது. செய்துங்கநல்லூர் ஊராட்சி தலைவர் பார்வதிநாதன் தலைமை வகித்தார். வாசகர் வட்ட துணைத் தலைவர் அப்துல் காதர் முன்னிலை வகித்தார். வாசகர் வட்ட தலைவர் திருமலை நம்பி வரவேற்றார். மாவட்ட நூலக அலுவலர் ரெங்கநாயகி போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசு வழங்கினார். சிறந்த வாசகராக சுடலைமாரி தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசு வழங்கப்பட்டது. எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு, வாசகர் வட்ட முன்னாள் தலைவர் ஜீவா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியை வாசகர் வட்ட துணைச் செயலாளர் கோபாலகிருஷ்ணன் தொகுத்து வழங்கினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in