Published : 20 Nov 2021 03:10 AM
Last Updated : 20 Nov 2021 03:10 AM

நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கு : நாளை முதல் விருப்ப மனுக்கள் : அமைச்சர் எ.வ.வேலு அறிவிப்பு :

திருவண்ணாமலை

தி.மலை மாவட்டத்தில் நகர் புற உள்ளாட்சித் தேர்தலுக்கான விருப்ப மனுக்கள், திமுக சார்பில் (21-ம் தேதி) நாளை முதல் வழங்கப்படும் என மாவட்ட திமுக செயலாளரும், பொதுப்பணித் துறை அமைச்சருமான எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தி மலை, ஆரணி, செய்யாறு மற்றும் வந்தவாசி ஆகிய 4 நகராட்சிகள் மற்றும் கீழ்பென்னாத்தூர், வேட்டவலம், செங்கம், புதுப்பாளையம், போளூர், களம்பூர், கண்ணமங்கலம், தேசூர், பெரணமல்லூர், சேத்துப்பட்டு ஆகிய 10 பேரூராட்சிகளுக்கு நகர் புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் திமுக சார்பில் விருப்ப மனுக்கள் நாளை (21-ம் தேதி) முதல் வழங்கப்படும். மாவட்ட திமுக அலுவலகத்தில் ரூ.10 செலுத்தி விருப்ப மனுவை பெற்றுக் கொள்ளலாம். நகர்மன்ற உறுப்பினர் பதவிக்கு ரூ.5 ஆயிரமும், பேரூராட்சி மன்ற உறுப்பினர் பதவிக்கு ரூ.2,500-ம் செலுத்தவேண்டும். ஆதிதிராவிடர்கள் மற்றும் பெண்கள் 50 சதவீதம் செலுத்த வேண்டும். விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, கட்டணத் தொகையுடன் மாவட்ட திமுக அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x