தேசிய நூலக வார விழாவையொட்டி - மாணவர்களுக்கு பேச்சு, ஓவியம், விநாடி வினா போட்டிகள் :

தேசிய நூலக வார விழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் பங்கேற்ற மாணவர்களுடன் நடுவர்கள்.
தேசிய நூலக வார விழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் பங்கேற்ற மாணவர்களுடன் நடுவர்கள்.
Updated on
1 min read

நீலகரி மாவட்ட மைய நூலகத்தின் சார்பில் தேசிய நூலக வார விழாவை முன்னிட்டு உதகை அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி,ஓவியப்போட்டி, விநாடி வினா போட்டிகள் நடைப்பெற்றன.

நிகழ்ச்சிக்கு, பள்ளியின் தலைமையாசிரியர்(பொறுப்பு) சுரேஷ் தலைமை வகித்தார். மாவட்ட மைய நூலக நூலகர் ரவி மற்றும் அனைவருக்கும் இடைநிலைகல்வி குன்னூர் கல்வி மாவட்ட பொறுப்பாளர் ராமச்சந்திரன் முன்னிலை வகித்தனர்.

ஒருங்கிணைத்த கல்வி திட்ட அலுவலர் குமார் போட்டிகளை தொடங்கி வைத்தார். 80-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் போட்டிகளில் பங்கேற்றனர். வாசகர் வட்ட துணைத்தலைவர் சுரேஷ்ரமணா, கவிஞர் ஜே.பி, சித்த மருத்துவர் சாஜூ, ஆசிரியை காயத்திரி ஆகியோர் நடுவர்களாக பணியாற்றினர். நூலகர் சிவாஜி நன்றி கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in