Published : 19 Nov 2021 03:09 AM
Last Updated : 19 Nov 2021 03:09 AM

கொட்டும் மழையில் நெசவாளர்கள் குடை பிடித்தபடி ஆர்ப்பாட்டம் :

காஞ்சிபுரம் கே.எஸ்.பி. பார்த்தசாரதி கைத்தறி சங்கம் சார்பில் கீழ் ரோடு பகுதியில் உள்ள கைத்தறி மற்றும் துணிநூல் துணை இயக்குநர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மழைக்கால நிவாரணம் வழங்க வேண்டும், நெசவாளர்களுக்கு கரோனா காலத்தில் கொடுக்கப்பட்ட கடனை கரோனா பேரிடர் நிதியில் இருந்து தள்ளுபடி செய்ய வேண்டும், நெசவாளர்களுக்கு 30 சதவீத கூலி உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு கே.எஸ்.பி. பார்த்தசாரதி கைத்தறி சங்கத்தின் தலைவர் ஜெ.கமலநாதன் தலைமை தாங்கினார். காமாட்சி அம்மன் பட்டு கூட்டுறவு சங்கத்தின் தலைவர் பா.ஸ்டாலின், கே.எஸ்.பி. பட்டு கூட்டுறவு சங்கத்தின் தலைவர் பி.வி.சீனுவாசன் உட்பட பலர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x