Published : 19 Nov 2021 03:11 AM
Last Updated : 19 Nov 2021 03:11 AM

வியாபாரிகள், தொழில் முனைவோருக்கு - தொழிற்கடன் வழங்க நாளை சிறப்பு முகாம் : திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா தகவல்

மாவட்ட முன்னோடி வங்கி சார்பில் வியாபாரிகள் மற்றும் தொழில் முனைவோருக்கு சிறப்பு தொழிற்கடன் முகாம் திருப்பத்தூரில் நாளை நடைபெறுகிறது என ஆட்சியர் அமர்குஷ்வாஹா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட் டுள்ள செய்திக்குறிப்பில், ’’திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த வியாபாரிகள் மற்றும் தொழில் முனைவோர்களுக்கு தொழிற் கடன் முகாம் நாளை (20-ம் தேதி) சனிக்கிழமை காலை 10 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெறுகிறது.

இம் முகாமில் கலந்து கொள்ள விரும்பும் தொழில் முனைவோர் மற்றும் வியாபாரிகள் தங்களது ஆதார் கார்டு, பான்கார்டு, திட்ட அறிக்கை, வியாபார தேவைக்கான திட்ட மதிப்பீடு ஆகியவற்றுடன் கலந்து கொள்ள வேண்டும்.

இம்முகாமில் தகுதியான நபர்களுக்கு மாவட்ட தொழில் மையம், தாட்கோ மற்றும் மாற்றத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மானியக்கடன் வழங்க ஏற்பாடுகள் செய்யப்படும். தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகள் முகாமில் கலந்து கொண்டு விண்ணப்பங்களை பெற்று தொழிற் கடன் வழங்க மாவட்ட முன்னோடி வங்கியான இந்தியன் வங்கி மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

எனவே, திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த வியாபாரிகள், உற்பத்தியாளர்கள், தொழில் முனைவோர் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக்கொண்டு தேவையான சான்றிதழ்களுடன் வந்து தொழிற் கடன் பெறலாம்’’ என தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x