Published : 18 Nov 2021 03:07 AM
Last Updated : 18 Nov 2021 03:07 AM

திருப்பூரில் இருவருக்கு டெங்கு காய்ச்சல் :

திருப்பூர்

திருப்பூர் மாவட்டம் முழுவதும் பெய்து வரும் தொடர்மழையால், நகரின் பெரும்பாலான பகுதிகளில் மழை நீர் குளம்போல தேங்கியுள்ளது. நாளுக்குநாள் கொசுக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில் திருப்பூரை சேர்ந்த 30 வயது பெண், காங்கயம் கிராஸ் சாலை புஷ்பா நகரை சேர்ந்த 12 வயது சிறுவன் ஆகியோருக்கு கடும் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவர்களுக்கு பரிசோதனை மேற்கொண்டதில் டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து இருவருக்கும் மருத்துவர்கள் குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x