Published : 18 Nov 2021 03:08 AM
Last Updated : 18 Nov 2021 03:08 AM

ஆம்னி பேருந்து மோதி தொழிலாளி மரணம் பரமக்குடி அருகே பொதுமக்கள் மறியல் :

இதையடுத்து கிராம மக்கள் ஆம்னி பேருந்து ஓட்டுநரை கைது செய்ய வேண்டும், இங்கு அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதால் தடுப்பு கம்பிகள் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி பொட்டிதட்டியில் தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் பரமக்குடி-ராமேசுவரம் சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதனிடையே பரமக்குடி தாலுகா போலீஸார் விபத்து ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற ஆம்னி பேருந்தை சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் மடக்கி, அதன் ஓட்டுநர் உச்சிப்புளியைச் சேர்ந்த ஜெயந்தன் (30) என்பவரை கைது செய்தனர். இதையடுத்து மக்கள் மறியலைக் கைவிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x