Published : 18 Nov 2021 03:08 AM
Last Updated : 18 Nov 2021 03:08 AM

கர்ப்பிணி மனைவியை கொன்ற கணவருக்கு ஆயுள் சிறை :

தேனி சின்னமனூரைச் சேர்ந்தவர் சுரேஷ். மனைவி கற்பகவல்லி (19). இவர் 14 வயது சிறுமியாக இருந்தபோது சுரேஷ் திருமணம் செய்தார். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இந்நிலையில் கற்பகவல்லி 3-வது முறையாக கர்ப்பமானார். அப்போது அவர் மீது சந்தேகப்பட்ட சுரேஷ், அவரை கொடுமைப்படுத்தினார். 21.6.2015-ல் கற்பகவல்லி கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டார். கொலை செய்யப்படுவதற்கு முன்பு கற்பகவல்லி வயிற்றில் பலமாக தாக்கப்பட்டுள்ளார். இதனால் கரு கலைந்துள்ளது.

கற்பகவல்லியை கொலை செய்ததாக சுரேஷை சின்னமனூர் போலீஸார் கைது செய்தனர். அவருக்கு சாகும் வரை தூக்குத் தண்டனை வழங்கி தேனி நீதிமன்றம் தீர்ப்பளித்தது. தண்டனையை நிறைவேற்றக்கோரி சின்னமனூர் காவல் ஆய்வாளர் உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிபதிகள் பாரதிதாசன், ஆனந்தி அமர்வு விசாரித்து, சுரேஷுக்கு கீழமை நீதிமன்றம் வழங்கிய தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து உத்தரவிட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x