Published : 17 Nov 2021 03:07 AM
Last Updated : 17 Nov 2021 03:07 AM

மார்த்தாண்டம் போலீஸார் விசாரணையின்போது - இளைஞர் உயிரிழந்தது தொடர்பான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் :

மதுரை

மார்த்தாண்டம் போலீஸாரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் உயிரிழந்த வழக்கின் விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம், முளன்குழியைச் சேர்ந்த ரோஸ்மேரி, உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு:

எனது இளைய மகன் லிவின்ராஜை, கடந்த ஏப்ரல் 29-ல் விசாரணைக்காக மார்த்தாண்டம் போலீஸார் அழைத்துச் சென்றனர். ஷபிதா, ராணி ஆகியோர் அளித்த புகார் குறித்து விசாரிக்க அழைத்துச் செல்வதாக போலீஸார் தெரிவித்தனர். காவல் நிலையத்தில் எனது மகனை போலீஸார் கடுமையாக தாக்கியுள்ளனர். ஏப்.30-ல் லிவின்ராஜ் உயிரிழந்தார். இது தொடர்பான வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் விசாரித்து, விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x