கோவை மாணவி உயிரிழப்புக்குநீதி கேட்டு மாணவர்கள் ஆர்ப்பாட்டம் :

கோவை மாணவி உயிரிழப்புக்குநீதி கேட்டு மாணவர்கள் ஆர்ப்பாட்டம் :

Published on

கோவையில் பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் நீதி கேட்டு தஞ்சாவூரில் நேற்று மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவையில் பள்ளி மாணவி பாலியல் தொல்லையால் தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தைக் கண்டித்து பல்வேறு இடங்களில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், மாணவி தற்கொலைக்குக் காரணமான ஆசிரியரை தூக்கிலிட வேண்டும். மாணவியின் உயிரிழப்புக்கு நீதி வழங்க வேண்டும் எனக் கோரி தஞ்சாவூர் ஆட்சியர் அலுவலகம் முன் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, மாணவிகள் படிக்கும் பள்ளிகளில் பெண் ஆசிரியர்களை மட்டுமே பணியமர்த்த வேண்டும். மாணவியின் தற்கொலைக்குக் காரணமான அனைத்து நபர்களையும் கண்டறிந்து கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. பின்னர், மாணவர்கள் தனித் தனியாக கோரிக்கை மனுவை ஆட்சியர் அலுவலகத்தில் அளித்தனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in