Published : 16 Nov 2021 03:09 AM
Last Updated : 16 Nov 2021 03:09 AM

சங்கராபுரத்தில் 14 செ.மீ மழை : 2 பேர் உயிரிழப்பு

கடந்த சில தினங்களாக பெய்துவரும் கனமழையால் கள்ளக் குறிச்சி மாவட்டத்தில் பல்வேறுஇடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. அதிகபட்சமாக நேற்று முன்தினம் இரவு சங்கராபுரத்தில் 14 செ.மீட்டர், கள்ளக்குறிச்சி மற்றும் திருக்கோவிலூரில் தலா 11 செ.மீட்டர் மழை பதிவாகியுள்ளது. மாவட்டத்தில் சராசரியாக 20 மி.மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

கள்ளக்குறிச்சியில் பெய்த கனமழையால் ஏமப்பேர் பகுதியில் வசிக்கும் சுப்ரமணியன் மனைவி லட்சுமி(45) என்பவரின் வீட்டின் சுவர் நேற்று அதிகாலை இடிந்து விழுந்ததில் அவர் உயிரிழந்துள்ளார்.

விருத்தாசலம் வட்டம் மங்கலம்பேட்டையை அடுத்த டி.மாவிடந்தல் கிராமத்தைச் சேர்ந்த அப்துல்லா மகன் நவீன்ஷேக்(23) என்பவர் நேற்று அதே பகுதியில் உள்ள ஏரியில் தூண்டில் மூலம் மீன் பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது அவர் எதிர்பாராத விதமாக ஏரியில் தவறி விழந்து உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. மங்கலம்பேட்டை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். நெல்லிக்குப்பம் அருகே உள்ள முள்ளிக்கிரம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துலிங்கம். கூலித் தொழிலாளி. இவரது மகன் லோகேஸ்வரன் (17 ). இவர் நெல்லிக்குப்பத்தில் உள்ள ஒரு பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார். அதே ஊரை சேர்ந்தவர் நாகராஜின் மகன்மாதவன் (21), பட்டதாரி. மகள் மாளவிகா( 21). நேற்று முன்தினம் மாலை லோகேஸ்வரன், மாதவன், மாளவிகா ஆகிய 3 பேரும் அதே பகுதியில் உள்ள தென்பெண்ணை ஆற்றுக்கு சென்றுள்ளனர். திடீரென தண்ணீரில் அடித்து செல்லப்பட்டனர். தீயணைப்பு படையினரால் லோகேஸ்வரன், மாளவிகா ஆகிய இருவரின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டது. நேற்று காலை நீண்ட நேர தேடுதலுக்கு பின் மாதவன் உடல் மீட்கப்பட்டது.

கடலூர் மாவட்டம் மற்றும் புதுச்சேரி பகுதியில் நேற்று முன்தினம் இரவு பலத்த இடியுடன் மழை பெய்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x