குண்டர் சட்டத்தில் 4 பேர் கைது :

குண்டர் சட்டத்தில் 4 பேர் கைது  :
Updated on
1 min read

தூத்துக்குடி மாவட்டம் சிப்காட் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ராஜகோபால் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஆவுடையப்பன் (61). இவர் முன்விரோதத்தில் கொலை செய்யப்பட்டார். போலீஸார் வழக்கு பதிவு செய்து, அதே பகுதியைச் சேர்ந்த சுப்பையா, நாராயணன், பிரகாஷ், ராம்ஜெயந்த், கந்தசாமி (என்ற) ராஜா ஆகியோரை கைது செய்தனர். இதில் சுப்பையா, நாராயணன், பிரகாஷ், கந்தசாமி (என்ற) ராஜா ஆகியோர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் பரிந்துரைத்தார். ஆட்சியர் கி.செந்தில்ராஜ் உத்தரவின் பேரில் சுப்பையா உள்ளிட்ட 4 பேரும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு, பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in