Published : 15 Nov 2021 07:12 AM
Last Updated : 15 Nov 2021 07:12 AM

திருவள்ளூர் மாவட்டத்தில் 32 ,000 ஏக்கர் : விவசாய நிலங்கள் நீரில் மூழ்கின :

திருவள்ளூர் மாவட்டத்தில் நீர்வளத் துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறையின் கீழ் உள்ள 1,155 ஏரிகளில் 672 ஏரிகள் முழுமையாக நிரம்பியுள்ளன. இதில், நீர்வளத் துறையின் கீழ் உள்ள 574 ஏரிகளில் 363 ஏரிகளும், ஊரக வளர்ச்சித் துறையின் கீழ் உள்ள 581 ஏரிகளில் 309 ஏரிகளும் முழுமையாக நிரம்பி உபரிநீர் வெளியேறி வருகிறது. மேலும், மாவட்டத்தில் உள்ள மொத்த ஏரிகளில் 308 ஏரிகளில் 75 சதவீதத்துக்கு மேலாகவும், 141 ஏரிகளில் 50 சதவீதத்துக்கு அதிகமாகவும் நீர் இருப்பு உள்ளது. முழு கொள்ளளவை எட்டியுள்ள ஏரிகளிலிருந்து வெளியேறும் உபரி நீரால், பொன்னேரி, சோழவரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 32 ஆயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x