காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் மத்திய இணை அமைச்சர் பங்கேற்பு :

காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் மத்திய இணை அமைச்சர் பங்கேற்பு :
Updated on
1 min read

விருதுநகர் அருகே ரோசல்பட்டி இந்திரா நகர் குடியிருப்பில் கட்டப்பட்டுள்ள காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது. இதில், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கலந்து கொண்டார்.

பின்னர் நடந்த கட்சி நிகழ்ச்சியில் மூத்த நிர்வாகிகளுக்கு சால்வை அணிவித்தார். தொடர்ந்து விருதுநகர் தேச பந்து திடல் அருகே உள்ள மருத்துவமனை வளாகத்தில் நடந்த ரத்த தான முகாமை தொடங்கி வைத்தார். மாவட்டத் தலைவர் கஜேந்திரன், அரசு தொடர்புத்துறை நிர்வாகி பாண்டுரங்கன் பங்கேற்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in