

திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டியில் உள்ள சேரன் பள்ளியில் குழந்தைகள் தின விழா முதல்வர் திலகம் தலைமையில் நடந்தது.
முன்னாள் பிரதமர் நேருவின் உருவப்படத்துக்கு மாணவிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து பாட்டு, நடனம், பேச்சுப்போட்டிகள் நடந்தன. நிகழ்ச்சியில் பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.