Published : 14 Nov 2021 03:07 AM
Last Updated : 14 Nov 2021 03:07 AM

மழையால் சுவர் இடிந்து ஓட்டுநர் உயிரிழப்பு :

நெய்வேலி அருகே உள்ள வடக்கு மேலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சந்தோஷ் குமார்( 45). லாரி ஓட்டுநர். இவர் தனது கூரை வீட்டில் நேற்று முன்தினம் இரவு தந்தை பச்சைமுத்து (70), தாயார் கல்யாணி (65), மனைவி வளர்மதி (39) மகள் ஈஸ்வரி(20) ஆகியோருடன் தூங்கிக் கொண்டிருந்தார்.

கடந்த இரண்டு நாட்களாக பெய்த கனமழை காரணமாக ஈரமாக இருந்த வீட்டின் சுவர் நேற்று அதிகாலையில் திடீரென இடிந்து விழுந்தது. இதில் சந்தோஷ்குமார் இடிபாடுகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பச்சைமுத்து, கல்யாணி, வளர்மதி, ஈஸ்வரி ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர். அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி செய்யப்பட்ட நிலையில் மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். உயிரிழந்த சந்தோஷ்குமாரின் உடலை நெய்வேலி டவுன் ஷிப் போலீஸார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x