சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை வழக்கில் - முதியவர் உட்பட இருவருக்கு தலா 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை :

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை வழக்கில் -  முதியவர் உட்பட இருவருக்கு தலா 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை :
Updated on
1 min read

தாராபுரம் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப் பட்ட வழக்கில், இருவருக்கு தலா 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து திருப்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அனைத்து மகளிர் காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கடந்த 2017-ம் ஆண்டு 17 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார். புகாரின் பேரில், போக்சோ பிரிவின் கீழ் மகளிர் போலீஸார் வழக்கு பதிவு செய்து, தாராபுரம் பகுதியை சேர்ந்த ஏ.மனோஜ்குமார் (27), எஸ்.மோசஸ் (70), கே.பிரகாஷ் (29) ஆகிய மூவரைக் கைது செய்தனர்.

இவ்வழக்கு திருப்பூர் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், வழக்கில் நேற்று முன்தினம் தீர்ப்பளிக்கப்பட்டது. குற்றம் சுமத்தப்பட்ட பிரகாஷ், மோசஸ் ஆகிய இருவருக்கும் தலா 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் முறையே ரூ.25 ஆயிரம், ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்தும், மனோஜ்குமாரை விடுதலை செய்தும், நீதிபதி ஸ்வர்ணம் ஜே.நடராஜன் தீர்ப்பளித்தார்.

அபராதத்தை செலுத்த தவறினால் கூடுதலாக 6 மாதங்கள் சிறைத் தண்டனை அனுபவிக்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in