Published : 12 Nov 2021 03:18 AM
Last Updated : 12 Nov 2021 03:18 AM

செய்யாறு அருகே குடிநீர் கேட்டு சாலை மறியல் :

செய்யாறு அருகே குடிநீர் கேட்டு காலிக் குடங்களுடன் கிராம மக்கள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தி.மலை மாவட்டம் செய்யாறு அடுத்த பாப்பாந்தாங்கல் ஊராட்சி கணேசபுரம் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு ஊராட்சி மூலம் குடிநீர் வழங்கப்படுகிறது. இந்நிலையில், மின்மோட்டார் வயர் எரிந்ததால், குடிநீர் விநியோகம் தடைபட்டுள்ளது. இது குறித்து முறையிட்டும் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள், செய்யாறு – ஆற்காடு சாலையில் நேற்று காலிக் குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகலவறிந்த செய்யாறு காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து சாலை மறியல் முடிவுக்கு வந்தத. இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x