பரமக்குடியில் பெண் கொலை இளைஞர் கைது :

பரமக்குடியில் பெண் கொலை இளைஞர் கைது :
Updated on
1 min read

பரமக்குடி மருதுபாண்டியர் நகரைச் சேர்ந்தவர் பாகம்பிரி யாள் என்ற அன்புச்செல்வி(37). இவரது கணவர் மகாலிங்கம். 3 பெண் குழந்தைகள் உள்ளனர். கருத்து வேறுபாட்டால் கணவன், மனைவி பிரிந்து வாழ்கின்றனர். இந்நிலையில் பாகம்பிரியாள் வேந்தோணி அண்ணாநகரைச் சேர்ந்த சேகர்(47) என்பவருடன் நெருங்கிப் பழகி வந்தார். இதனால் சேகர் குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதையறிந்த சேகரின் மகன் சுப்பிரமணியன்(20) பாகம்பிரியாள் வீட்டுக்குச் சென்று தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் பாகம்பரியாளின் கழுத்தில் குத்தினார். பரமக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பாகம்பிரியாள் சிகிச்சை பலன் இன்றி இறந்தார். பரமக்குடி நகர் போலீஸார் சுப்பிரமணியனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவர் டிப்ளமோ ஏ.சி. மெக்கானிக் படித்துள்ளார். தற்போது ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in