Published : 09 Nov 2021 03:11 AM
Last Updated : 09 Nov 2021 03:11 AM

நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் - காலி குடங்களுடன் பெண்கள் போராட்டம் :

திருநெல்வேலி மாநகராட்சி 10-வதுவார்டுக்கு உட்பட்ட திருஞானசம்பந்தர் தெரு, திருநாவுக்கரசு நாயனார் தெரு பகுதிகளைச் சேர்ந்தவர்கள், மாநகராட்சி அலுவலகத்துக்கு காலி குடங்களுடன் வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர், அவர்கள் மாநகராட்சி ஆணையர் அலுவலகத்தில் அளித்த மனு: திருநெல்வேலி மாநகராட்சி 10-வது வார்டுக்கு உட்பட்ட பார்வதியம்மன்கோயில் தெரு, திருஞானசம்பந்தர் தெரு, திருநாவுக்கரசு நாயனார் தெரு உள்ளிட்ட தெருக்களில் கடந்த சில நாட்களாககுடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை. இப்பகுதி மக்கள் அருகிலுள்ள வார்டுகளுக்கு சென்று குடிநீர் பிடித்து வருகிறார்கள். பாளையங்கோட்டை சமாதானபுரம் பகுதியிலுள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியிலிருந்து குடிநீர் விநியோகம் நடைபெற்ற போது பாதிப்பு ஏற்படவில்லை. ஆனால் தற்போது மணப்படை வீடு அருகில்நீரேற்று நிலையத்திலிருந்து குடிநீர்வருவதால் சரியான முறையில்குடிநீர் விநியோகம் நடைபெறவில்லை. இப்பகுதியில் நிலவும் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வுகாண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x