Published : 08 Nov 2021 01:09 AM
Last Updated : 08 Nov 2021 01:09 AM

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு :

சேலம்

சேலத்தில் மின்சாரம் பாய்ந்து கட்டிடத்தொழிலாளி உயிரிழந்தார்.

சேலம் கிச்சிப்பாளையம் அடுத்த களரம்பட்டியைச் சேர்ந்தவர் அங்கப்பன் (58). கட்டிடத் தொழிலாளியான இவர் எருமாபாளையத்தில் உள்ள டாஸ்மாக் கடையின் முன்பு இருந்த இரும்புத் தடுப்பை பிடித்தபடி மது வாங்க காத்திருந்தார். அப்போது, டாஸ்மாக் கடைக்கு அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்ததில், இரும்புத் தடுப்பில் மின்சாரம் பாய்ந்தது. இதில், மின்சாரம் பாய்ந்து அங்கப்பன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதுதொடர்பாக அன்னதானப்பட்டி போலீஸார் விசாரணை நடத்தினர். விசாரணையில், டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் டாஸ்மாக் கடையில் மின்சாரம் ‘ரிட்டர்ன் சப்ளை’ ஆகி, இரும்புத் தடுப்பில் மின்சாரம் பாய்ந்தது தெரியவந்தது. இதையடுத்து, மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு டாஸ்மாக் கடை தற்காலிகமாக மூடப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x