சிறுகலூர் அருவியில் செல்பி எடுப்பதற்காக  ஆற்றைக் கடக்க முயன்ற சிறுவன் மாயம் :

சிறுகலூர் அருவியில் செல்பி எடுப்பதற்காக ஆற்றைக் கடக்க முயன்ற சிறுவன் மாயம் :

Published on

கல்வராயன்மலை சிறுகலூர் அருவியில் செல்பி எடுப்பதற்காக ஆற்றைக் கடக்க முயன்ற சிறுவன் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலை சேராப்பட்டு அருகே சிறுகலூர் அருவிக்கு நேற்று சதீஷ்(22), வெங்கடேஷ்(17),பூமிநாதன்(22) மற்றும் 12 வயது சிறுவன் ஆகியோர் சென்றுள்ளனர். அப்போது அருவியின் மேற்பரப்புக்குச் சென்ற சதீஷ், வெங்கடேஷ் மற்றும் பூமிநாதன் ஒவ்வொருவராக செல்பி எடுத்துள்ளனர். இதைக் கண்ட சிறுவன் தானும் செல்பி எடுக்கவேண்டும் எனக் கூறி,சிறுகலூர் ஆற்றைக் கடக்க முயற்சித்துள்ளார். அப்போது சிறுவன் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டார். இதையடுத்து தகவலறிந்த சங்கராபுரம் தீயணைப்பு துறையினர் சிறுவனை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in