பள்ளிப்பட்டு அருகே - ஊராட்சி மன்ற துணைத் தலைவியின் கணவர் உயிரிழப்பு :

பள்ளிப்பட்டு அருகே -  ஊராட்சி மன்ற துணைத் தலைவியின் கணவர் உயிரிழப்பு  :
Updated on
1 min read

திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டை அடுத்த  காவேரி ராஜபேட்டை ஊராட்சி மன்ற துணைத் தலைவி விஜயாவின் கணவர் ரமேஷ் (41). இவர் பொம்மராஜிபேட்டை கிராமத்தில் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்தார்.

இந்நிலையில், நெடியம் பகுதியில் உள்ள கொசஸ்தலை ஆற்றில் உள்ள தரைப்பாலத்தின் அடியில் ரமேஷ் நேற்று இறந்துக் கிடந்தார். தகவல் அறிந்து பள்ளிப்பட்டு போலீஸாரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ரமேஷின் உடலை திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து, அவரது உறவினர்கள் கூறும்போது, “கடந்த வாரம்ஊராட்சியில் சமூக தணிக்கை சிறப்பு கிராமசபைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது, ஊராட்சி மன்றத் தலைவி குமாரியின் கணவர் பொன்னுசாமிக்கும், துணைத் தலைவி விஜயாவின் கணவர் ரமேஷுக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. முன்விரோதம் காரணமாக ரமேஷ் கொல்லப்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது. அவரது இறப்பில்மர்மம் உள்ளது” என்றனர்.

இதற்கிடையே, திருத்தணி அரசு மருத்துவமனையில் ரமேஷின் உடலை வாங்க மறுத்து அவர்களது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in