திருச்செந்தூர் கடலில் : ஆவடி காவல் உதவி ஆய்வாளர் மரணம் :

திருச்செந்தூர் கடலில்  : ஆவடி காவல் உதவி ஆய்வாளர் மரணம்  :
Updated on
1 min read

சென்னை திருமுல்லைவாயல் ஜெயலட்சுமி நகர் முதல் மெயின்ரோட்டைச் சேர்ந்தவர் ராஜசேகரன்(57). இவர் ஆவடி டேங்க் பேக்டரி காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றிவந்தார். கந்தசஷ்டி திருவிழாவையொட்டி திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு குடும்பத்துடன் வேனில் வந்திருந்தார்.

திருச்செந்தூர் கடலில் அவர்கள் அனைவரும் குளித்த போது, ராஜசேகரனுக்கு திடீரெனநெஞ்சுவலி ஏற்பட்டது. அரசுமருத்துவமனையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர்ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். கடலோர பாதுகாப்பு குழும போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இறந்த ராஜசேகரனுக்கு, மனைவி, மகன், 3 மகள்கள் உள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in