திருப்பரங்குன்றம் கோயிலில் நவ.9-ல் சூரசம்ஹாரம் :

திருப்பரங்குன்றம் கோயிலில் நவ.9-ல் சூரசம்ஹாரம்   :
Updated on
1 min read

மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் துணை ஆணையர் மு.ராமசாமி வெளியிட்ட செய்திக்குறிப்பு:

திருப்பரங்குன்றம் கோயிலில் கந்தசஷ்டி திருவிழா நவ.4-ம் தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. நவ.8-ல் வேல் வாங்குதல் நிகழ்ச்சி, நவ.9-ல் சூரசம்ஹாரம், நவ.10-ம் தேதி மாலை பாவாடை தரிசனம் நடைபெறும். முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரத்தன்று நவ.9 காலை 5.30 மணி முதல் நடை திறக்கப்பட்டு நண்பகல் 12.30 மணி வரை பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவர். பின்னர் கோயில் நடை சாத்தப்படும்.

மாலை 4.30 மணி முதல் 5.30 மணிக்குள் சூரசம்ஹார நிகழ்வு கோயில் வளாகத்தில் உள்ள திருவாச்சி மண்டபத்தில் நடைபெறும். பின்னர் மாலை 6 மணிக்கு சுவாமி, அம்பாளுக்கு மாலை மாற்றுதல் முடிந்து இரண்டாம் புறப்பாடு உள்ளிட்டவை நடைபெறும். சூரசம்ஹார நிகழ்வில் பக்தர்கள் பங்கேற்க அனுமதியில்லை.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in