Published : 07 Nov 2021 03:07 AM
Last Updated : 07 Nov 2021 03:07 AM

பிளஸ் 2 தனித் தேர்வர்கள் - மதிப்பெண் சான்றிதழ் பெற கால அவகாசம் :

ராமநாதபுரம் ஆட்சியர் சங்கர்லால் குமாவத் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

2014 மார்ச் முதல் 2018 செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் பிளஸ் 2 தேர்வெழுதிய தனித்தேர்வர்களில் இதுவரை சான்றிதழை பெறாதவர்கள், ஒரு வெள்ளைத் தாளில் மதிப்பெண் சான்றிதழ் கோரும் விவரத்தைக் குறிப்பிட்டு தேர்வெழுதிய பருவம், பிறந்த தேதி, பாடம் மற்றும் தேர்வு மையத்தின் பெயர் ஆகிய விவரங்களைக் குறிப்பிட்டு ரூ.45-க்கான அஞ்சல் வில்லை ஒட்டப்பட்ட சுய முகவரி எழுதிய உறை ஒன்றை இணைத்து, உதவி இயக்குநர், அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகம், அறை எண்.83, 3-வது தளம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் (புதிய கட்டிடம்), ராமநாதபுரம் என்ற முகவரிக்கு வரும் டிசம்பர் 31-ம் தேதிக்குள் அனுப்பி பெற்றுக் கொள்ளலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x