Published : 07 Nov 2021 03:08 AM
Last Updated : 07 Nov 2021 03:08 AM

திருச்செந்தூர் கடலில் குளித்த - காவல் உதவி ஆய்வாளர் மரணம் :

திருச்செந்தூரில் கடலில் குளித்தபோது மாரடைப்பு ஏற்பட்டதில், சென்னை ஆவடி காவல் உதவி ஆய்வாளர் மரணமடைந்தார்.

சென்னை திருமுல்லைவாயல் ஜெயலட்சுமி நகர் முதல் மெயின்ரோட்டைச் சேர்ந்தவர் ராஜசேகரன்(57). இவர் ஆவடி டேங்க் பேக்டரி காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தார். கந்தசஷ்டி திருவிழாவையொட்டி திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு குடும்பத்துடன் வேனில் வந்திருந்தார்.

நேற்று மாலை 3.30 மணிக்கு திருச்செந்தூர் கடலில் அவர்கள் அனைவரும் குளித்தனர். அப்போது, ராஜசேகரனுக்கு திடீரெனநெஞ்சுவலி ஏற்பட்டது. உடனடியாக, 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதுதொடர்பாக, கடலோர பாதுகாப்பு குழும போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இறந்த ராஜசேகரனுக்கு, ஜோதிலட்சுமி(54) என்ற மனைவியும், சுந்தரவடிவேல் (34) என்ற மகனும், இளவரசி (32). கலையரசி (30), யமுனா (25) ஆகிய மகள்களும் உள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x