ஆற்றில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு :

ஆற்றில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு :
Updated on
1 min read

திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகே உள்ள திருக்கண்டலம் பகுதியைச் சேர்ந்தவர் அருள் மகன் அஜய்(16). இவர் நேற்று முற்பகலில் தன் வீட்டருகே கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணை பகுதியில் குளித்துக்கொண்டிருந்தார். அப்போது, ஆற்றின் ஆழப்பகுதிக்குச் சென்ற அஜய் எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கினார்.

இதுகுறித்து, தகவல் அறிந்த பெரியபாளையம் போலீஸார் சம்பவ இடம் விரைந்து, பொதுமக்களின் உதவியோடு, அஜய்யை சடலமாக மீட்டனர்.

மீட்கப்பட்ட அஜய்யின் உடலை பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு போலீஸார் அனுப்பி வைத்தனர். இதுகுறித்து, பெரியபாளையம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in